உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலர் நல்லதம்பி, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து தி. மு. க. , அரசுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் இட்டனர்.