செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில், கஞ்சா, மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 60 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளன. இந்த ஏலம் மார்ச் 7, 2026 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பின்புறம் நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் மார்ச் 3, 2026 அன்று மாலை 5 மணி வரை ரூ. 1000/- நுழைவு கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 18% சரக்கு மற்றும் சேவை வரியையும் உடனடியாக செலுத்த வேண்டும்.