அதைத்தொடர்ந்து, எல்லையம்மன் திருத்தேரில் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியதை தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேர் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக இழுத்து சென்றனர். அப்போது, வழிநெடுகிலும் கிராம மக்கள் தேங்காய் உடைத்தும் சூடம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். திருத்தேர் முன்பாக, விரதமிருந்த பக்தர்கள் முதுகில் அலகு குத்தி கட்டை கால் நடனம் ஆடியும், டிராக்டரில் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக சென்று நேர்த்தியுடன் செலுத்தினார்கள். அதேபோல், எல்லையம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு பொங்கல் படையல் இட்டு சுவாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்