இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்களுடன் வடம்பிடித்து இழுத்து சென்றனர். திருநீர்மலையை சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் அடிவாரம் வரை வந்து நிலை நின்றது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மு.கரு.முத்துராஜா தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, காவல்துறையினர், தீயணைப்பு, மின்சாரத்துறையினர் உள்ளிட்டோர் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் மாறிக்கொண்டு கலந்துகொண்டு பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று சென்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை