செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், மே 21 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில், தாம்பரம் தவெக எம்எல்ஏ சரத்குமார் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மனிதவள மேலாண்மை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.