இதனால், நாளுக்கு நாள் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. புதிதாக உருவாகிய பல வீடுகளில் கதவு எண் எழுதப்படாமல் உள்ளன. இதனால், அரசின் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போதும், பிற தேவைகளின் போதும் கதவு எண் தெரியாமல் குழம்புகின்றனர் என்ற சர்ச்சை இருந்து வந்தது.
இந்த நிலையில், குன்றத்தூர் ஒன்றியம் செரப்பனஞ்சேரி ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு புதிய கதவு எண் விபரம் அடங்கிய ஸ்டிக்கர் பதிக்கும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அவ்வாறு, ஸ்டிக்கர் பதிக்க வரும் ஊழியர்கள், வீட்டின் உரிமையாளர்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.