செங்கை: 6வது மாடியில் இருந்து குதித்த ஐ. டி., ஊழியர்

சென்னை அடுத்த திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ், 26. பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல, நேற்று முன்தினம் சூரிய பிரகாஷ் பணிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. பேசி முடித்ததும், அவசர அவசரமாக அலுவலகத்தில் இருந்து ஆறாவது மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பீர்க்கான் காரணமாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சூரிய பிரகாஷ் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த பெண், திடீரென பேசுவதை நிறுத்தி காதலை மறுத்ததாகவும், அதன் காரணமாக ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி