இந்த குழாயில் இருந்து வாயு மற்றும் ஆயில் வெளியேறி அதன் மூலம் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டால் இதில் தீ கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் அவசரகால மருத்துவ முதலுதவிகள் குறித்தும் மற்றும் அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் செயல்முறை விளக்கத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக இந்திய ஆயில் நிறுவன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கொண்ட குழு, குழாய் பாதை தொடர்பான அவசர கால பேரிடர் கால ஒத்திகையை சிறப்பான முறையில் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திக் காண்பித்தனர். இந்த சிறப்பு முகாமில் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், மருத்துவக் குழுவினர் மற்றும் இதர அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை