திருக்கழுக்குன்றத்தில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 10வது வார்டு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய திருப்போரூர் எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 10வது வார்டு பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நியாயவிலை கடைக்குச் செல்ல வேண்டுமெனில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ருத்ரான்கோவில் அருகே உள்ள கடைக்குத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. 

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நியாயவிலை கடை வேண்டும் என்று திருப்போரூர் எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜியிடம் பேரூராட்சி கவுன்சிலர் தௌலத் பீவி கோரிக்கை வைத்ததின் பேரில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12.50 லட்சம் மதிப்பில் நியாயவிலை கடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் அடிக்கல் நாட்டுவிழா பேரூராட்சி கவுன்சிலர் தௌலத் பீவி ஏற்பாட்டில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி கலந்துகொண்டு பூமிபூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணியைத் துவக்கிவைத்தார். இங்கு கட்டப்படும் நியாயவிலை கடையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவர்.

தொடர்புடைய செய்தி