அப்போது, மோகநந்தன் வீட்டில் இல்லாததால், உமாராணி வீட்டின் பின்புறம் சென்று தேடி பார்த்த போது, செப்டிக் டேங்க் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் மோகநந்தனின் உடல் மிதந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, குழந்தையின் உடலை மீட்டு, மதுரமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.