மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது என்றார். எந்த நகருக்கும் கிடைக்காத ஒரு மிகச் சிறப்பு செங்கல்பட்டு நகருக்கு கிடைத்தது. மிகச்சிறந்த பேச்சாளர்கள், அரசு ஓய்வு பெற்ற பிரதிநிதிகள் இந்த அரங்கில் தினம் தோறும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர். மேலும் சென்னை அடுத்தபடியாக செங்கல்பட்டில் அதிக அளவில் புத்தக ஸ்டால்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது பார்க்க முடிகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக 100 ரூபாய் டோக்கன் வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் டோக்கன் மூலமாகவும் அவர்கள் காசு கொடுத்தும் புத்தகங்களை அதிக அளவில் வாங்கி படிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்