காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவாக்கம் ஏரிக்கரையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், நேற்று ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டபோது, ஏரிக்கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிராமணர் தெருவில் வசிக்கும் மணிகண்டன், (27), என்பது தெரியவந்தது. போலீசார் இவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி