சென்னை விமான நிலையத்தில் உலக சாதனை படைத்த மாணவிகள்

ஆடல், பாடல், நடனம், யோகா என 100 பேர் ஒரே மேடையில் தொடர்ந்து 25 நிமிடம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் KTAS என்ற பெண்கள் தொழில்முனைவோர் நிறுவனம் சார்பில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 4 வித கலைகளை செய்யும் ஐன்ஸ்டின் உலகசாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி 100 பேர் ஒரே மேடையில் பாடல், ஆடல், நடனம், யோகா மற்றும் பேஷன் ஷோ ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடத்தினர். சுமார் 25 நிமிடம் இடைவிடாமல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமை வெளிப்படுத்தினர். 

மாணவர்களின் இந்த முயற்சி பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது. ஒரே நேரத்தில் 4 கலைகளும் ஒரே மேடையில் செய்யப்பட்டதால் ஐன்ஸ்டின் உலகசாதனை நிறுவனம் இதனை புதிய உலகசாதனையாக அங்கீகரித்தது. சாதனை படைத்த பெண் தொழில்முனைவோர் கிருத்திகாவிற்கு, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் உலகசாதனை விருது வழங்கி கௌரவித்தார். அதேபோல் உலகசாதனையில் ஈடுபட்ட 100 பேருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி