பின், மேம்பாலத்தின் மேல் ஏறி, 50 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார். இதில், அவரின் கைகள் உடைந்து, நெற்றியில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட வாலிபர் விருகம்பாக்கம், சி. ஆர். ஆர். , புரம், எல் அண்டு டி காலனியை சேர்ந்த சாமுவேல்ராஜ், 23, என தெரியவந்தது. காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில் எம். பி. ஏ. , முடித்த இவர், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
வீட்டில் இருந்து கிரிக்கெட் பயிற்சிக்கு புறப்பட்டு செல்லும்போது, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் அணிக்கு தேர்வாகாததால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.