செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் (27). இவர், கடந்த 17ம் தேதி, ராமாபுரம் பெட்ரோல் பங்கில், 'பஜாஜ் பல்சர்' பைக்கை நிறுத்திவிட்டு, வேலைக்குச் சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்தபோது, பைக் காணாமல் போனது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சுந்தரம், பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று (ஜூன் 11) மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.