காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் மேம்பாலம் அருகே உள்ள மழைநீர் கால்வாயில், 40 வயதுள்ள வடமாநில நபர் ஒருவர், கால்வாயில் விழுந்து கிடப்பதாக ஒரகடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த போலீசார் கால்வாயில் விழுந்து கிடந்தவரை மீட்டு, பரிசோதித்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிந்தது. உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜனிக் ராஜீ, 46, என்பதும், மது போதையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.