கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.. கோர்ட் அதிரடி

மொழி குறித்த தனது பேச்சுக்கு கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா கருத்து தெரிவித்துள்ளார். "மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை. தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது? அவரின் பேச்சு கன்னட மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. கமல் மன்னிப்பு கேட்பது ஒன்றே பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். வழக்கு விசாரணையின் தீர்ப்பு மதியம் வழங்கப்படும்" என்றார்.

தொடர்புடைய செய்தி