கள்ளக்குறிச்சி விவகாரம்: மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் இன்று (ஜூன் 19) உயிரிழந்தனர். ஆனால், அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாவட்ட எஸ்.பி சமய் சிங் மீனா, மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி தமிழ்ச்செல்வன், காவல் ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் ஆய்வாளர் பாண்டிச்செல்வி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி