விழுப்புரம் வட்டம், வளவனூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, பின்தொடர்ந்து வந்த திண்டிவனம் வட்டம், சஞ்சீவிராயன்பேட்டையைச் சேர்ந்த கோதண்டராமன் மகன் ஆனந்தன் (34) அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடந்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூர் போலீசார் ஆனந்தன் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.