ஆதார் கார்டில் உள்ள நபர் நேரில் வர வேண்டும், இல்லையென்றால் மறுநாள் பணிக்கு வரும் டாக்டரிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ளும்படி டாக்டர் கூறியுள்ளார். இதனால் மூவரும் டாக்டரிடம் வாக்குவாதம் செய்து, ஆபாசமாக பேசியுள்ளனர். இது குறித்து டாக்டர் சுரேஷ்குமார், தன்னை ஆபாசமாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக வானுார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிந்து, ராமச்சந்திரன், முத்துவேல், உதயக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
டாக்டரை மிரட்டிய சம்பவத்தை கண்டித்து, நேற்று மதியம் 12.45 மணியளவில் திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சம்பத் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் ஜெயக்குமார், இணை செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.