உளுந்தூர்பேட்டை தாலுகா பாதுார் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் கோகுல், 21; இவர் சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த கோகுல், உறவினரான முத்துவேல் மகன் ரோகித்தை, 17; வீட்டில் இருந்து செங்குறிச்சி டோல்கேட் நோக்கி பைக்கில் உட்கார வைத்து ஓட்டிச் சென்றார். நேற்று முன்தினம் (டிசம்பர் 27) இரவு 11 மணியளவில் செங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செண்டர் மீடியா தடுப்புக்கட்டை மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் இறந்தார். ரோகித் மேலும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.