அப்போது உளுந்தூர்பேட்டை நகராட்சி கந்தசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்,(வயது 50), குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதைக் கண்டறிந்து அவரது ஸ்கூட்டரையை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் வந்த வெங்கடேசன், ஸ்கூட்டரையைத் தருமாறு போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஜெயச்சந்திரனிடம், (வயது 38), கேட்டார். ஜெயச்சந்திரன் ஸ்கூட்டரையைத் தர முடியாது என கூறியதால் வெங்கடேசன் தகராறு செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், போலீஸ்காரர் ஜெயச்சந்திரனின் வலது கையைக் கடித்தார். படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசனைக் கைது செய்தனர்.