இதையொட்டி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளி விழா திருவள்ளுவர் திருஉருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பிரசாந்த் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தொவி மரியாதை செலுத்தினார். பொங்கல் பண்டிகை வரை பொதுமக்கள் பார்வைக்காக திருவள்ளுவர் சிலை காட்சிப்படுத்தப்பட உள்ளது. வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் வெள்ளி விழா உருவச்சிலையினை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் கந்தசாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. வெடித்த சர்ச்சை