கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் சுங்கச்சாவடியில் 4 வேன்களுக்கு பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் அந்த வேன்களில் வந்த கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து சென்றனர். பின்னர், பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவு 1.00 மணியளவில் மாடூர் சுங்கச்சாவடி வந்த அவர்கள், தங்கள் வாகனங்களுக்கு ஏற்கனவே வசூலித்த சுங்க கட்டணத்தை திருப்பிக் கேட்டு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து, 15 நிமிடத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வசூல் செய்த சுங்க கட்டணத்தை டோல்கேட் நிறுவனம் கட்சியினரிடம் திருப்பிக் கொடுத்ததை அடுத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.