கள்ளக்குறிச்சி: எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்; குமரகுரு பரபரப்பு பேச்சு

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் குமரகுரு, அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமி தனக்கு துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டினார். உளுந்தூர்பேட்டை தொகுதிக்குக் கலைக் கல்லூரி கேட்டபோது, பழனிசாமி அதை ரிஷிவந்தியம் தொகுதிக்கு ஒதுக்கினார். கிராமப்புற மாணவர்கள் பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தியதால் பொறுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ரிஷிவந்தியம் தொகுதிக்குக் கலைக் கல்லூரி கொண்டுவரப்பட்டு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி