கள்ளக்குறிச்சி அதிமுக செயலாளராக 22 ஆண்டுகளாக இருந்த பாபு, தனது மனைவி அழகுவேல் பாபுவிற்கு அதிமுகவில் சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, நகர செயலாளர் பாபு மற்றும் மகளிர் அணி செயலாளரான அவரது மனைவி அழகுவேல் பாபு ஆகியோர் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்த கார்த்திகேயன் முன்னிலையில் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று திருவண்ணாமலைக்கு வரும் முதல்வர் முன்னிலையில் அவர்கள் திமுகவில் இணைய உள்ளனர்.