சங்கராபுரம்: மதுவில் விஷம் கலந்து குடித்தவர் பலி

சங்கராபுரம் அடுத்த கூடலுரை சேர்ந்தவர் மாயவன், (வயது 60); , விவசாயி. இவர் நேற்று முன்தினம் (செப்.12) வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.13) இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி