சங்கராபுரம்: கொசு மருந்து அடிக்கும் பணி

சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக கொசு உற்பத்தி அதிகமானது. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையொட்டி சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சங்கரன் உத்தரவின் பேரில் நகரில் உள்ள 15 வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது.

தொடர்புடைய செய்தி