கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பரணி தீபத்தை முன்னிட்டு 1008 விளக்குகள் ஏற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பரணி தீபக்குழு தலைவி ஹேமலதா தலைமையிலான குழுவினர் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.