ஈரியூர்: துணை சுகாதார நிலையம் திறப்பு விழா

சின்னசேலம் அடுத்த ஈரியூரில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஆத்மா குழுதலைவர் கனகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் அஞ்சலைமுருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடத்தை சேர்மன் சத்தியமூர்த்தி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் ஹரினி, தி.மு.க., அவைத்தலைவர் துரைசாமி, மாவட்ட பிரதிநிதி முருகேசன், தொண்டரணி சுரேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி