சின்னசேலம்: குடிப்பதற்கு பணம் தர மறுத்தவர் மீது தாக்குதல்

சின்னசேலத்தில் பணம் தர மறுத்தவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். 

கச்சிராயபாளையம், வெங்கட்டாம்பேட்டை சாலை பகுதியைச் சேர்ந்தவர் பூங்கான் மகன் அழகிரி 47, இவர் சின்னசேலம் பகுதியில் உள்ள ஹோட்டலில் மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பருடன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது சின்னசேலம், திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமு மகன் கருப்பன் 40, என்பவர் அழகிரியை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டுள்ளார். 

அழகிரி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கருப்பன் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த சின்னசேலம் போலீசார் கருப்பனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி