தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் வீரசோழபுரம் பகுதியில் நேற்று (டிசம்பர் 29) திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது வீரசோழபுரம் வடக்கு தெரு பழனிமுத்து மனைவி தமிழரசி, 56; என்பவர் தனது வீட்டில் அரசின் அனுமதியின்றி மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. தியாகதுருகம் போலீசார் தமிழரசியை கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.