திருக்கோவிலுார் அடுத்த தேவியகரம், கச்சிக்குத்தான் கிராமத்தில் உள்ள மாணிக்க ராசப்பர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (பிப்.23) நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு கோபூஜை, திரவியாகுத்தி, ஹோமம், வேள்விகள், பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடந்து 9:00 மணிக்கு மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.