திருக்கோவிலூா்: பட்டப்பகலில் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு

திருக்கோவிலூர் வட்டம், டி. கீரனூர் கிராமம், வக்கீல் நகரைச் சேர்ந்த குமார் மனைவி மாரியம்மாள் (53). இவர், புதன்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு திருக்கோவிலூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குச் சென்றார். 

இந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரர் மாரியம்மாளை கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதாகத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி