ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் (34) 'ஏசி' மெக்கானிக். இவர், சில மாதங்களுக்கு முன், குல தெய்வ வழிபாட்டிற்காக ஆடு வாங்கி அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (60) என்பவரிடம் வளர்க்க கொடுத்தார். இது தொடர்பாக கடந்த 7ம் தேதி ஏற்பட்ட தகராறில் பாண்டுரங்கனை கொடுவாளால் கண்ணன் தாக்கினார். இது குறித்த புகாரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்தனர்.