அப்போது, மர்ம நபர் வேறு ஒரு ஏடிஎம் கார்டினையும் சோமசுந்தரத்திடம் கொடுத்து அனுப்பினார். மறுநாள் 23ஆம் தேதி, கடலூர் மாவட்டம், பெரியசித்தாமூர் பகுதி ஏடிஎம்மில் சோமசுந்தரம் கார்டை பயன்படுத்தி அவரது வங்கியில் இருந்து ரூ.15 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த சோமசுந்தரம், வங்கி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு, போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, பணத்தை 'அபேஸ்' செய்த மர்மநபரைத் தேடிவருகின்றனர்.