மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் காவல் சரகத்திற்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் நிகழாண்டு முழுவதும் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த 77 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.
இந்த ஆய்வின் போது விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ். பி. சமய்சிங் மீனா, கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செள. சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.