மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செந்தாமரை (60) என்பவர், தனது மருமகள் ஆர்த்தியுடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 31ஆம் தேதி மீண்டும் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த செந்தாமரை வெளியூர் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து செந்தாமரையின் மகள் கவிதா கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து செந்தாமரையை தீவிரமாக தேடி வருகின்றனர்.