சங்கராபுரம் அருகேயுள்ள வன்னஞ்சூர் பகுதியைச் சேர்ந்த மலர்விழி (46) என்பவர், செவ்வாய்க்கிழமை அன்று முருகன் என்பவரது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து பாய்ந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சங்கராபுரம் போலீஸார், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.