புகார் அனுப்பிய நபர், தன்னுடைய பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பவானி மேற்பார்வையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை குழுவினர் மருத்துவமனையில் பணிபுரியும் ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.
மொத்தம், 265 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், இதுவரை 169 பேரிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும் அதன் இறுதி அறிக்கை கலெக்டரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பவானி தெரிவித்தார்.