அதில் கிடைத்த தகவலின்படி சிறையில் உள்ள கதிரவன், 30; ஜோசப், 40, சின்னதுரை, 36; ஆகிய 3 பேரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதன்பேரில், மூவரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி ஹரிஹரசுதன் உத்தரவிட்டார். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தேவராஜ் மூவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க, நீதிபதி (பொறுப்பு) ரீனா உத்தரவிட்டார்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்