கள்ளக்குறிச்சி: லாரி மோதி விபத்தில் முதியவர் பலி

கச்சிராயபாளையம் அடுத்த கெங்கியாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (74); இவர் நேற்று முன்தினம் (பிப்.22) மாலை 6:00 மணி அளவில் சின்னசேலம் நோக்கி பைக்கில் மடத்துக்காடு அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் வந்த கரடி சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி