கள்ளக்குறிச்சி: மருத்துவமனையில் குழந்தை இறப்பு

உளுந்துார்பேட்டை அருகே சின்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (40). இவரது ஒன்றரை வயது குழந்தை விஷ்ணுபிரியாவுக்கு, கடந்த 27ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 30) மாலை 4:00 மணிக்கு குழந்தை இறந்தது. 

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க குழந்தையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 முறை மருந்து செலுத்தி ஸ்கேன் செய்த பின், ஆம்புலன்ஸ் இல்லாததால் பைக் மூலம் குழந்தையை மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், ஆம்புலன்ஸ் இன்றி, ஆக்ஸிஜன் வழங்கப்படாமல் பைக்கில் குழந்தையைக் கொண்டு வந்ததால் இறந்தது என, குழந்தையின் தாய் தனலட்சுமி தெரிவித்தார். இச்சம்பவத்தால் மகப்பேறு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி