கள்ளக்குறிச்சி: கனமழை பெய்ய வாய்ப்பு.. வெளியான அலர்ட்

தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 13) நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று (ஜூன் 13) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதே போல் நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி