கள்ளக்குறிச்சி: ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி அடுத்த விளக்கூரையைச் சேர்ந்தவர் ஏழுமலை, (43); ஆட்டோ டிரைவர். கடந்த 2 ஆண்டுகளாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் (மார்ச்.13) இரவு 10:30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி