வீடுகள்தோறும் நலக்கல்வி மூலமாக கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நகராட்சி முழுதும் சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக வீடுகள், கடைகள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி, பூந்தொட்டிகள், டயர், தண்ணீர் தொட்டி, தேங்காய் ஓடுகளில் தேங்கும் தண்ணீரை அகற்றி டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.