ALERT: கள்ளக்குறிச்சியில் வெளுக்க போகும் மழை..உஷார்

தமிழ்நாட்டில் இன்று (மே 10) 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும்
சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், கடலூர், திருப்பூர், சேலம், திருச்சி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 25 மாவட்டங்களிலும் இன்று (மே 10) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி