தமிழகத்தில் பெரும்பாலான மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூவின் விலை தற்போது இரு மடங்காகி, ரூ.4,500 என்ற உச்சத்தை தொட்டுள்ளது. நாளை (நவ.27) முகூர்த்த தினம் என்பதால் தேவை அதிகரித்துள்ளதும், உள்ளூர் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
நன்றி:NewsTamil24/7