ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் இயக்குநர் ஆனந்த் அம்பானி, குஜராத்தின் ஜாம்நகரில் 'வந்தாரா' வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை நடத்தி வருகிறார். தனது 31வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜெய்ப்பூர் அருகே ஹாதி கான் பகுதியில் யானைகளுக்கென பிரம்மாண்டமாக 3,000 கிலோ எடையுள்ள பழ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வாழைப்பழங்கள், ஆப்பிள்கள், தர்பூசணி, கரும்பு, வெல்லம், பப்பாளி, ஆரஞ்சு மற்றும் பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டன. பாபு, புஷ்பா, சந்தா ஆகிய மூன்று யானைகள் கேக் வெட்டும் நிகழ்வில் பங்கேற்றன.