தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உட்பட TNEB, TNGECL, TNPGCL மற்றும் TANTRANSCO ஆகிய அனைத்து பிரிவு ஊழியர்களும் பணிநேரத்தில் அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழியர்களின் வருகையை முறைப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காகவும் இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை தவறாமல் பின்பற்றுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.